Akaram Makkal Kalaikoodam

அகரம் மக்கள் கலைக்கூடத்தின் முதலாவது பிரிவின் சிலம்பம் அரங்கேற்ற போட்டிகளும் பரிசளிப்பு விழாவும்

அகரம் மக்கள் கலைக்கூடத்தின் முதலாவது பிரிவின் சிலம்பம் அரங்கேற்ற போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் 20.08.2023 அன்று திருகோணமலை பிரதான கடற்கரையின் வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்னால் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

அகரம் மக்கள் கலைக்கூடத்தின் சிலம்பாட்ட ஆசான் திரு சுகுமார் ராஜ ஆனந் அவர்களின் வழிகாட்டலில் ஆறுமாதகாலம் தொடர் பயிற்சிகளை மேற்கொண்ட 20 மாணவர்கள் தமது அரங்கேற்றத்தினை செய்திருந்தனர்.