Akaram Makkal Kalaikoodam

ஆடிப்பிறப்பு நிகழ்வு

அகரம் மக்கள் கலைக்கூட வளாகத்தில் 17.07.2024 அன்று மாலை 4 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அகரம் மக்கள் கலைக்கூடத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என அனைவரும் வயது வேறுபாடின்றி கலந்துகொண்டனர். நிகழ்வில் அனைவருக்கும் ஆடிக்கூழ் வழங்கப்பட்டதோடு கபடி, கிளித்தட்டு, சில்லுக்கோடு, கிட்டி, பல்லாங்குழி, குண்டு அடித்தல் போன்ற எமது பாரம்பரிய விளையாட்டுகளில் அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் கலைக்கூட மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் வழங்கப்பட்டதோடு அகரம் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. சிறப்பம்சமாக அகரம் ஓராண்டு போட்டி பரிசளிப்பு அமைந்தது. ஆடிப்பிறப்பு பாடல் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க