Akaram Makkal Kalaikoodam

அகரம் மக்கள் கலைக்கூடம்
திருகோணமலை

அருகி வருகின்ற தமிழர் கலை, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்களை திருகோணமலை மண்ணில் அடுத்த சந்ததிகளுக்கு திரிபுகளின்றி கொண்டு போய் சேர்க்கின்ற நோக்குடன் கலைக்கூடமாக நிறுவப்பட்டு எம்மவர் பாரம்பரிய கலைசார் கற்கைநெறிகளை ஒரே கூரையின் கீழ் வழங்கி வருகின்றோம்.

தமிழர் கலைகள் தலைமுறைகள் தாண்டி

அகரம் மக்கள் கலைக்கூட பொங்கல் விழா 2024

அகரம் மக்கள் கலைக்கூட பொங்கல் விழா 2024

அகரம் மக்கள் கலைக்கூடம் வாணி விழா 2024

அகரம் மக்கள் கலைக்கூடம் வாணி விழா 2024

அகரம் சிலம்பம் பிரீமியர் லீக்

அகரம் சிலம்பம் பிரீமியர் லீக்

அகரம் மக்கள் கலைக்கூடம் | 2வது பாரம்பரிய சிலம்பாட்ட அரங்கேற்றம்

அகரம் மக்கள் கலைக்கூடம் | 2வது பாரம்பரிய சிலம்பாட்ட அரங்கேற்றம்

அகரம் மக்கள் கலைக்கூட பொங்கல் விழா 2024
அகரம் மக்கள் கலைக்கூடம் வாணி விழா 2024
அகரம் சிலம்பம் பிரீமியர் லீக்
அகரம் மக்கள் கலைக்கூடம் | 2வது பாரம்பரிய சிலம்பாட்ட அரங்கேற்றம்

கலைவகுப்புக்கள்

சிலம்பம்

என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.

எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.

இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல உலகம் முழுவதிலும் உள்ளன. நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கு பெறுவர்,

நற்சான்றுகள்

அகரம் கலைக்கூடம் ஆற்றும் கலைச்சேவை சிகரம் தொட வாழ்த்துகிறேன் வாழி வாழி.

மிருதங்க ஆசிரியர்

சி காண்டீபன்

கலைகள் மனித வாழ்வியலில் நீக்கமுற நிறைந்திருப்பவை. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் இளந்தலைமுறையினா்பயில்வதற்கு களம் அமைத்துக் கொடுக்கின்ற திருகோணமலை அகரம் மக்கள் கலைக்கூடம் ஆலமரம் போல் விரிவடைந்து கவின் கலைக்கல்லூரியாக வளர்ச்சியுற்று சிகரம் தொடுவதற்கு ஒரு மாணவனாக எனது நல்வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர்
பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
கிழக்கு மாகாணம்.

வி.குணபாலா

அகரம் மக்கள் கலைக்கூடமானது தலைமுறைகள் தாண்டி தமிழர் கலைகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கோடு இயங்கிவருகின்றது. அது மேலும் மேலும் வளர இயற்கையை வேண்டுகின்றேன்.

தலைமை இணைப்பாளர்

சி விவேகானந்தன்

அகரம் மக்கள் கலைக்கூடம் மேற்கொண்டுவரும் பணிகள் மிக பெறுமதி மிக்கவையென நன்புகிறேன். பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கவும், மேம்படுத்தவும் ஆற்றி வரும் பணிகள் புதிய பரம்பரையினருக்கு அவசியமானது.அந்த வகையில் நவராத்திரி தினத்தில் அகரம் மக்கள் கலைக்கூடத்துக்கான இணைய தளம் ஆரம்பிக்கப்படும் முயற்சி காலத்துக்குரியது. அதற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

முன்னாள் தலைவர்
பலநோக்கு கூட்டுறவு சங்கம்
திருகோணமலை

சி நவரத்தினம்